நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

நவம்பர் 30, 2011

அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் கட்டாய தகுதி தேர்வு

ஆசிரியர் நியமனத்தில் கட்டாய தகுதி தேர்வு பற்றி :

 
அரசுப் பள்ளிகளில் புதியதாக நியமனம் பெற உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தகுதி தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.  அதில் கூறப்பட்டுள்ள விவரம்: கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில்,  தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளபடி 1 முதல் 8ம் வகுப்புகளில் பாடம் நடத்த நியமிக்கப்படும் ஆசிரியர்கள் இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும்  என்றும் தெரிவித்து இருந்தது. அதை அப்படியே தமிழக அரசும் எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்துக்காக தகுதித் தேர்வு நடத்த உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று அரசு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் என்சிடிஇ ஏற்கெனவே தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள்தான்.  அரசு நேற்று வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரம் வருமாறு:

* ஆசிரியர் பணிக்குரிய பட்டப் படிப்புகளை படித்து தகுதி பெற்றுள்ளவர்கள் இந்த தகுதித்தேர்வை எழுதலாம்.
* தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட (கொள் குறிவகை) கேள்விகள் இடம் பெறும். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். தவறான விடைக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது.
* தகுதித் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். இரண்டும் தலா 150 மதிப்பெண்கள் கொண்டாக இருக்கும். 1 முதல் 5ம் வகுப்புவரை பாடம் நடத்த தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு தாளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு ஒரு தாளும் இடம் பெறுகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்புவரை பாடம் நடத்த தகுதியுள்ளவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.
* தாள் 1 (1 முதல் 5ம் வகுப்பு வரை) தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல், மொழித்தாள் 1, மொழித்தாள் 2, கணக்கு, சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பிரிவுகளில்  இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெறும்.
* தாள் 2 (6 முதல் 8ம் வகுப்புவரை) தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல், மொழி 1, மொழி 2 (கட்டாயம்) எழுத வேண்டும்.
* ப்கணக்கு மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் கேள்விகள் அமையும். சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அதே பாடத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.
* மற்ற பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட கணக்கு அல்லது சமூக அறிவியல் பிரிவில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 கேள்விகளும், தலா ஒரு மதிப்பெண்ணும் இடம் பெறும்.
* மேற்கண்ட தேர்வு எழுதுவோர் அந்த தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெறுகின்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவராவார்.
* தேர்ச்சி பெற்றவர்கள், அரசு, உள்ளாட்சி அமைப்பு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்யலாம்.
* தகுதித் தேர்வு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகள் வரை பணி வாய்ப்பு பெற தகுதி பெறுகிறார்.
* தகுதித் தேர்வை நடத்த அரசு தரப்பில் ஒரு தலைமை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தகுதித் தேர்வுகள் குறித்து தலைமை அதிகாரி ஆண்டுக்கு ஒரு முறை தேசிய ஆசிரியர் கல்வி கழகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

மாநில சீனியாரிட்டி தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவையும், தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு பரிசீலித்து ஆசிரியர் பணி நியமனத்தில் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முடிவு வரும் வரை, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும். பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்தை பொறுத்தவரை தேர்வு நடத்தியே (ஆசிரியர் தகுதித் தேர்வு) தெரிவு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து சான்று சரிபார்ப்பு நடத்தப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்