நல் வரவு GET IDEA GET INFO WEB SERVICES

ஜூன் 20, 2011

ஜுலை 8ல் பொறியியல் கலந்தாய்வு துவக்கம்-20-06-2011

பொறியியல் கல்வி (பி.இ.) பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்வி மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பொறியியல் கல்வி கவுன்சிலிங்கிற்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் வெளியிட்டார்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ள http://www.annauniv.edu/tnea2011/random.html இணையதளத்தை பார்க்கவும். பல மாணவர்கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் போது அவர்களை வரிசைப்படுத்த இந்த எண் வழங்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொறியியல் கல்வி கவுன்சிலிங்கிற்கான மாணவர்களின் ரேங்க் பட்டியல் இம்மாதம் 24ம் தேதி வெளியிடப்படுகிறது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதனை தொடர்ந்து இம்மமாதம் 30ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

தொழில் பிரிவினருக்கு ஜுலை மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் 7ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி 35 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

இதுவரையில் 1,63,509 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1,48,353 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்த காலியிடங்கள் 1,25,000 ஆக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்க இயலாத நிலையில் அவர்கள் சார்பில் அவர்களிடம் பெறப்பட்ட உரிய படிவத்துடன் அவர்களுடைய பெற்றோர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி - தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தற்போதைய இடுகைகள்

வாசகர்களின் கருத்துக்கள்